மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது- சிபிஐஎம் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்

மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயல் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்ந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. அதனை இனி வரும் காலங்களில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

தற்போது மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை முற்றிலும் பின்வாங்கச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

அனைத்து கட்சிகளையும் அழைத்து குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிக்க உள்ளோம். மாநிலக் குழு கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...