பாஜக-வின் மூன்றாண்டு ஆட்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கடந்த மூன்று ஆண்டுகால பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஓராண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்க்கப்படவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, சவுந்திரராஜன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநிலக் குழு கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டு கால பாஜக அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை. தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சட்டம் ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு விமர்சிப்பதில்லை. அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கின்றது.

இந்த மாநிலக் குழு கூட்டத்தில் இந்தி திணிப்பு, வறட்சி, மாட்டிறைச்சி போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு இல்லை. சென்னை ஐஐடி-யில் தாக்குதலுக்குள்ளான சூரஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது. தாக்கப்பட்ட சூரஜ் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் கையை முறிக்கும் காவல் துறை, கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றது" இவ்வாறு சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...