காட்டு யானை தாக்கி வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் காயம்

தமிழக வனத்துறை வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.

அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.

இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...