காட்டு யானை தாக்கி வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் காயம்

தமிழக வனத்துறை வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.

அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.

இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...