தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு புதிய வாகனங்கள் சேவை துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி கொடியசைத்து 11 ஜீப்களை 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு வழங்கினார்.



தமிழ்நாட்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் பாலமாக இருந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பங்களை மதிப்பீடு செய்தல், மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முதல் நிலை செயல்விளக்கங்கள் மூலம் புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரவலாக்கம் செய்தலை முதன்மைக் குறிக்கோள்களாக கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 30 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் வேலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆற்றிய சாதனைகளுக்காக “சிறந்த மண்டல வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கான விருதை” பெற்றுள்ளது. 

மேலும், கடலூர் வேளாண் அறிவியல் நிலையம் தேசிய அளவில் சிறந்த பயறுவகை பயிர்களுக்கான கூட்டு முதல்நிலை செயல் விளக்கத்திடலுக்கான விருதை பெற்றுள்ளது.

உழவர் பெருமக்களின் நன்மைக்காக விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு ரூபாய் 92 லட்சம் செலவில் 11 பொலிரோ ஜீப்களை வாங்கியுள்ளது.

இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கொடியசைத்து வைத்து, வாகனங்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

முனைவர் ஹெ. பிலிப், விரிவாக்கக் கல்வி இயக்குநர், பொறியாளர் எஸ். செந்தில் குமார், வளாக அலுவலர், பல்கலைக்கழக இயக்குநர்கள் மற்றும் துறை தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...