மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.



மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்திரவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையினை அவர்கள் எரிக்க முயன்ற போது காவல் துறையினர் அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடுப்புகளை மீறி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.



இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...