கோவை பேங்க் ஆப் இந்தியா சார்பில் “ஸ்டார் மஹொத்சவ்” விழா

கோவை மண்டல பேங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்டார் மஹொத்சவ்’ விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழிப்புணர்வு விழா நாடு முழுவதும் உள்ள 5200 வங்கி கிளைகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமே வங்கி வாடிக்கையாளர்களை அவர்களின் வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாராக் கடன் வசூல், புதிய வீட்டு, வாகன கடன்கள் வழங்குதல், தொழில் மற்றும் விவசாய கடன் வழங்குதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் மெஷின்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

இந்த விழிப்புணர்வு விழாவை ஆர்.என். புரம் கிளையில் மண்டல மேலாளர் தி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கிளை ஏ.ஜி.எம். டி.வி.ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வீடு, தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி அளிக்கப்பட்டது. இதைத் தவிர, சூலூர், காந்திபுரம், கோவை பிரதான கிளை ஆகியவற்றில் நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவிலும் ரவீந்திரன் பங்கேற்று, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், சுவர்ணபுரி கிளையில், நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவை துணை மண்டல மேலாளர் டி.டி.சீனிவாச ராவ் துவக்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த புரம் கிளை நடைபெற்ற விழாவை துணை மண்டல மேலாளர் கே.பாண்டியன் துவக்கி வைத்தார். 

கோவை மண்டலத்தில் நடைபெற்ற இவ்விழாவின் மூலமாக மொத்தமாக ரூ.46 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 கோடி மதிப்பிலான வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கிளை, துணை பொது மேலாளர், டி.வெங்கடேஷ்வர ராவ், கோவை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கௌரிசங்கர் ராவ் மற்றும் வி.எஸ்.சோமசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...