கோவை மாநகராட்சியில் தடைசெய்யப்பட்ட 1,506 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1,37,250 அபராதமாக வசூல்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த மே 27 முதல் ஜூன் 2 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 676 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 1,506 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (மே 2) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் கடந்த மே 27ம் தேதி முதல் இன்று மே 2 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிழக்கு மண்டலம், 37,56,57 மற்றும் 61-வது வார்டுக்குட்பட்ட திருச்சி ரோடு, காமராஜர் ரோடு, மசக்காளிப்பாளையம் ரோடு மற்றும் தண்ணீர்பந்தல் ரோடு ஆகிய பகுதியில் 154 கடைகளில் 62 கிலோவும், மேற்கு மண்டலம், 15, 16, 20, 21, 22, 23 மற்றும் 24-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், மருதமலை ரோடு உள்ளிட்ட பகுதியில் 87 கடைகளில் 105 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 28, 31, 38 மற்றும் 39-வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ரோடு, சத்தி ரோடு, காளப்பட்டி ரோடு, வி.கே.ரோடு மற்றும் ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் 103 கடைகளில் 124 கிலோவும், தெற்கு மண்டலம், 87, 88, 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100-வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் ரோடு, குனியமுத்தூர் மற்றும் செட்டி வீதி ஆகிய பகுதியில் 140 கடைகளில் 167 கிலோவும், மத்திய மண்டலம், 25, 48, 51, 52, 53, 54, 74, 80, 81, 82, 83 மற்றும் 84-வது வார்டுக்குட்பட்ட ப்ளவர் மார்க்கெட், காளிங்கராயன் வீதி 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, சுக்குவார்பேட், டவுன்ஹால் மற்றும் உக்கடம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதியில் 192 கடைகளில் 1048 கிலோவும் என மொத்தம் 676 கடைகளில் 1506 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தடையினை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததின் குற்றத்திற்காக பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம் அபராதத் தொகையாக ரூ.1,37,250 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று தெற்கு மண்டலத்தில் 85 வது வார்டு செட்டி தெருவில் பொது மக்களுக்கு இடையூராக சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து அபராதமாக ரூ.1,000 விதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...