குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதி மக்களுக்கு குலுக்கல் முறையில் வீடு

கோவை மாநகரத்தில், குளம் மற்றும் நீர்வழித்தட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாநகரத்தில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், கோவையில் உக்கடம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர் குறிச்சி மலை, கோவைபுதூர் அண்ணாநகர், மலைநகர் ஆகிய இடங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. குறிச்சி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், சங்கனூர் பள்ளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு மே 3 ஆம் தேதியன்று (நாளை) குலுக்கல் முறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒத்துக்கப்படுகின்றன.

அதன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலமாக, வெள்ளலூரில் 2,186, மலுமிச்சம்பட்டியில் 1,460, மதுக்கரை அண்ணாநகர் 960, மலைநகரில் 224 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 1,750 பேர் வசிப்பது உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு நாளை (மே 3) குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மற்ற நீர்நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கும் வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...