ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை. 2 பேர் காவல் நிலையத்தில் சரண்

கோவை செல்வபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:  

கோவை சுங்கம் சிவராம் நகரைச் சேர்ந்த கோபாலின் மகன் வினோத்குமார் (36), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், செல்வபுரம் ஐயூடிபி காலனியை அடுத்த தேவேந்திர காலனியில்  உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்குமாரை வெட்டியுள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குண்டுராஜன் என்கிற ராஜன் (38), செல்வராஜ் (37) ஆகியோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும், கள்ளக்காதல் தொடர்பாகவே இந்தக் கொலை நடந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...