ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



மத்திய அரசு ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது, பன்மடங்கு வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டு வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் செயலாகவே அமைகிறது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறு தொழில் வணிக நிறுவனங்களை பாதிக்காதவாறு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தியும், மாணவர்களை பாதிக்கும் போதை தரும் மாத்திரை, பெண்களின் சிசு கருச்சிதைவு போன்ற மருந்துக்களை தடைசெய்யக் கோரியும், உயிர்காக்கும் மருந்துக்களை குறைந்த விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவும், மத்திய மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் சுங்கவரியை குறைக்கவும், கோவை திருப்பூர் மையமாக செயல்படும் கணியூர் சுங்கசாவடியில் இருந்து 30 கிலோமீட்டர் வரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட பொருளாளர் பொன்.தங்கமரியப்பன் மற்றும் வணிகர் நலமுன்னேற்ற சங்கம், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...