சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப் பிறகு 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 850 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐஜி ரம்யா பாரதி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் டிஐஜி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அறிவியல் பூர்வமான தடயங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற சில வாரங்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வழிவகுக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...