சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப் பிறகு 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 850 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐஜி ரம்யா பாரதி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் டிஐஜி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அறிவியல் பூர்வமான தடயங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற சில வாரங்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வழிவகுக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...