கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் - வைகோ


கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் மிக சிறந்த இலக்கியவாதி என்றும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், காவிரி நதி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தைக் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் துணை போகிறது என்றும் குற்றம் சாட்டினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்ப்பதாகவும் கூறியதுடன் இதனை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் இல்லைவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, கலைஞர் ஒரு மிகசிறந்த இலக்கியவாதி மிக சிறந்த ராஜதந்திரி எனவும் அவருடைய எழுத்துகள், பேச்சுகள் மற்றும் அவருடைய நினைவு திறன் தன்னை வியக்க வைத்துள்ளது எனவும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை எனவும் புகழாரம் சூட்டினார். வைர விழாவிற்க்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் வைர விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...