தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினர்.


மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600 பெண்களுக்கு சுமார் 3 கோடியே 96 லட்சம் ரூபாய்  மதிப்பிலான தங்கம் மற்றும் நியியுதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற நிலையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் இதுவரை தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 27 ஆயிரத்து 563 பெண்களுக்கு சுமார் 131 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன், சூலூர் கனகராஜ் மற்றும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான  ஆறுகுட்டி, அருண்குமார், சின்ராஜ் என அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியல் கேள்விகளை தவிர்க்குமாறு அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...