அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும்- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்



கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படும் முறையற்ற வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முறைப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி கூடங்களுக்கோ, மாட்டிறைச்சி சாப்பிடவோ தடை இல்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாட்டை பாஜக மதச்சார்புடைய நாடாக காவிமயமாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். நாடு காவிமயம் ஆவதில் தவறில்லை, பாவிமயம் ஆவதே தவறு. எவ்வளவு தவறான கருத்துகளை முன்னிறுத்தினாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. திமுகவின் பிரித்தாளும் அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இருவருக்கும் இடம் காலியாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா உள்நோக்கம் கொண்டது. ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் நாட்டின் மக்கள் ஒட்டுமொத்தமாக பலன் பெறுவார்கள்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜாமீனில் தான் வெளிவந்து இருக்கிறார். விடுதலை ஆகவில்லை. தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. தினகரனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் அதிமுக அமைச்சர்களிடம் சங்கடம் உள்ளது" என்றார்.

இதனைத்தொர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக, பாஜக-விற்கு ஆதரவு அளிக்கிறதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ஏற்கவே பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...