அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும்- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்



கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படும் முறையற்ற வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முறைப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி கூடங்களுக்கோ, மாட்டிறைச்சி சாப்பிடவோ தடை இல்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாட்டை பாஜக மதச்சார்புடைய நாடாக காவிமயமாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். நாடு காவிமயம் ஆவதில் தவறில்லை, பாவிமயம் ஆவதே தவறு. எவ்வளவு தவறான கருத்துகளை முன்னிறுத்தினாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. திமுகவின் பிரித்தாளும் அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இருவருக்கும் இடம் காலியாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா உள்நோக்கம் கொண்டது. ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் நாட்டின் மக்கள் ஒட்டுமொத்தமாக பலன் பெறுவார்கள்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜாமீனில் தான் வெளிவந்து இருக்கிறார். விடுதலை ஆகவில்லை. தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. தினகரனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் அதிமுக அமைச்சர்களிடம் சங்கடம் உள்ளது" என்றார்.

இதனைத்தொர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக, பாஜக-விற்கு ஆதரவு அளிக்கிறதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ஏற்கவே பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...