உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை இணைப்பது என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...