பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்- உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பேச்சு


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தூய்மை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகரத்தில் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பை தரத்தை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் வார்டுவாரியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்செல்கின்றனர். மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையினை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். தொடர்ந்து, கோவை மாநகராட்சியை சுகாதாரமிக்க, தூய்மையான மாநகரமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...