திருநங்கைகளுக்கு திருநங்கைகளே தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையை சேர்ந்த திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு வர சில திருநங்கைகள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. 

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...