டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பள்ளி சீருடையுடன் மாணவர்கள் போராட்டம்


கோவை ராஜாவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராஜாவீதி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் வந்த மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடை முன்பாக இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகே செயல்படும் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி திறக்கும் முன்பாக அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுபானக் கடையினால் மாணவர்களுக்கு குடிபழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதுகுடிப்பவர்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...