நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் சுகாதார ஊழியர்கள் மனு

கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 304 ரூபாய் வழங்கப்படுவதில்லை. 

மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் சுகாதார ஊழிர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...