மே 17 இயக்கத்தினரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கக் கோரி அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்


மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைப் சேர்ந்த ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...