தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி- காஷ்மீர் வரை புல்லட் பயணம் கோவையில் துவக்கம்

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான புல்லட் பயணத்தினை பைக்ரைடர்ஸ் கிளப்பை சார்ந்த மூன்றுபேர் கோவையிலிருந்து துவங்கினர்.



கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து  ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.



சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...