ஆவாரம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகள், கோவில்கள் நிறைந்த இப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்கடையினை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளத நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்கள் நடைபெறவும் காரணமாக இருப்பதாகவும், இங்குள்ள பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையினை அகற்ற அரசிற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...