மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் குறிவைத்து தாக்கபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாடுகளை பாதுகாப்பதாக மத்திய அரசு வேஷம் போடுகிறது. தமிழ்நாட்டின் அடிப்படை மாநில உரிமை பரிக்கப்படுகிறது. மாநில உரிமைகளை காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவர்பின் வந்தவர்களுக்கு துணிச்சல் உண்டா என தெரியவில்லை. தமிழகத்தை ஆளுகிற இடத்தில் ஆள் இருக்கிறது போல் தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனிப் பெருமை உள்ளது. வைர விழா நடத்துவதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாவடக்கத்துடன், கருணாநிதி-யின் சாதனைகளை ஒப்புகொள்ள வேண்டும். தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டிற்குள் பாரதீய ஜனதா கட்சி கால் அடி எடுத்து வைக்காமல் தடுக்கும் கட்சிக்கு, அரசியலில் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...