நீலகிரியில் மதுபானக் கடையினை அகற்றக் கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடந்துரை மூச்சாக்கன்டி பகுதியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடையினை திறந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற செய்லாளர் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...