கோவையில் கன மழை- மக்கள் மகிழ்ச்சி

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும், அனைத்து குளங்களும் வறண்டு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இன்று பகல் 1 மணியளவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

மேலும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், பேரூர், மாதம்பட்டி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை விவசாய நிலங்களை பொழிவுபெற செய்துள்ளது.

இம்மழையினால் கோவை மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...