நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு


கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் பொறியாளர் மற்றும் கட்டிடம் சர்வேயர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கனகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 75, கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 



இப்பகுதியில், நீர்நிலை இருந்ததற்கான சான்றாக மாவட்ட நிர்வாகம் ஆவண எண் 149/2பி குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பில் எண் 10 கட்டிடமே இந்த நீர்நிலையினை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் ஒரு வணிக வளாகமும் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் ஒரு நீர்நிலையே மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கனகசுந்தரம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...