நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு


கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் பொறியாளர் மற்றும் கட்டிடம் சர்வேயர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கனகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 75, கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 



இப்பகுதியில், நீர்நிலை இருந்ததற்கான சான்றாக மாவட்ட நிர்வாகம் ஆவண எண் 149/2பி குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பில் எண் 10 கட்டிடமே இந்த நீர்நிலையினை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் ஒரு வணிக வளாகமும் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் ஒரு நீர்நிலையே மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கனகசுந்தரம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...