தீத்திபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

கோவை மாவட்டம், தீத்திபாளையத்திற்கு உட்பட்ட ஐயாசாமி மலை அடிவாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காட்டு யானை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனை பிடித்து சிகிச்சை அளிக்க கும்கி யானை பாரியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட காட்டு யானை, கடந்த சில தினங்களாக தீத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்து கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதன் தாக்குதலால் தற்போது வரை மூன்று மாடுகள், ஒரு ஆடு காயம் அடைந்துள்ளது. மேலும், ஒரு கன்றுக்குட்டி பலியாகியுள்ளது. தொடர்ந்து இந்த காட்டு யானையால் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

புதனன்று, இந்த யானை கோவைப்புதூரில் அமைந்துள்ள பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டு இடத்தில் சுற்றித்திரிந்துள்ளது.

எனவே, இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் கும்கி யானையான பாரியின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது ஐயாசாமி மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் இந்த காட்டு யானைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. செய்வதறியாது இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தியும், வளர்ப்பு கால்நடைகளை தாக்கியும் வருகிறது. இந்த யானையை பிடித்து மாற்று இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படவுள்ளது" என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...