மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன், தங்கை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த புதனன்று பரவலாக கன மழை பெய்தது. இதில, உக்கடம் பகுதியில் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சல்மான் (18), பானுமா (16) ஆகிய அண்ணன், தங்கைகள் உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்ட உக்கடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை வாங்க மறத்து அவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் கோவை வடக்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வடக்கு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...