இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய சுகேஷ் பாலாஜிக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்- கோவை நீதிமன்றம் உத்தரவு


கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் பாலாஜி இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவையை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலு என்பவர் சமையலறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2010ம் ஆண்டு அவரை தொடர்பு கொண்ட சுரேஷ் பாலாஜி தனது பெயரை பிரகாஷ் என்று அறிமுகம் செய்ததோடு தாம் கர்னாடக அரசின் துணை செயலாளராக பணியாற்றி வருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் பெற டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டெண்டர் பார்ம் உள்ளிட்டவைகளை அனுப்ப இரண்டரை லட்சம் ரூபாயை வங்கி மூலம் மாற்றம் செய்யுமாறும் கூறியுள்ளதார்.

இதனையடுத்து, ராஜவேலு அப்பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் மீண்டும் மூன்றரை லட்சம் ரூபாயை அனுப்புமாறு பிரகாஷ் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு, இது தொடர்பாக கர்னாடக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, பிரகாஷ் என்பவர் அப்பதவியில் இல்லை எனவும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக எவ்விதமான டெண்டரும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜவேலு இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்திரசேகர், அவரது மகன் சுகேஷ் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு கோவை இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிரிசனர்ஸ் டிரான்சிட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சுகேஷை இரயில் மூலம் கோவை அழைத்து வந்த போலீசார் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சுகேஷை வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சுகேஷை போலீசார் மீண்டும் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...