தமிழகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது சிபிஐ முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரு நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சி, காவிரி நதிநீர் ஆணைய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற 29ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பேரியக்கம் நடத்தப்படும் எனவும் 6 பயணக்குழுக்களாக பிரிக்கப்பட்டு 1000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 5ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, யெச்சூரி தாக்கப்பட்டதற்கும், மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு மணல் விலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...