மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை!

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதியன்று (நாளை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வைகோவுக்கு விசா வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழனன்று (நேற்று) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தினை அவர்கள் அடைந்தனர். இந்நிலையில், வைகோ-வை சோதனையிட்ட மலேசிய குடிவரவு அதிகாரிகள், வைகோ மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயர் அதிகாரிகளை வைகோ சந்தித்த நிலையில், இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். வைகோவின் பாஸ்போட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மற்றும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் ஆகியோர் முயற்சித்தும் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. 

இதனிடையே, இன்று இரவு 10.45 மணிக்கு மலேசியாவில் இருந்து சென்னை வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் வைகோ-வை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...