கோவையில் மதுபோதையில் தகராரில் ஈடுபட்ட கணவரைக் கொன்ற மனைவி

கோவை மாவட்டம், இருகூர், மருதாச்சலம் தேவர் வீதியில் வசித்து வந்தவர் ஈஷ்வரன் (43). இவரது மனைவி பரிமலா தேவி (40). கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இத்தம்பதியினருக்கு வசந்தகுமார் (17) என்ற மகன் உள்ளார்.



தேங்காய் வியாபாரம் செய்துவந்த ஈஷ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அறிந்தி விட்டு மனைவியுடன் தகராரில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அதிகளவில் மது அறிந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஈஷ்வரன், பரிமலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு உறங்கியுள்ளார். அப்போது, மனவேதனையில் இருந்த பரிமலா கயிற்றின் மூலம் ஈஷ்வரனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது அண்ணன் திருநாவுக்கரசு-விற்கு (52) தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருநாவுக்கரசு, ஈஷ்வரனின் உடலை தூக்கிட்டு தற்கோலை செய்துகொண்டது போல் வீட்டின் கூறையில் கட்டிவிட்டபின், ஈஷ்வரனின் தம்பி நடராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அங்கு வந்த நடராஜன், இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் மற்றும் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, பரிமாலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தனது கனவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின், காவல்துறையினர் பரிமலா தேவி மற்றும் அவரது அண்ணன் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...