அதிமுக பல அணிகலாக பிரிந்ததற்கு பாஜக காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல எனவும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இது வரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளே விவசாயம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் வழக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தக்க நேரத்தில் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது" என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

முதலில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மாலையில் கோவையில் நடைபெறும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...