அதிமுக பல அணிகலாக பிரிந்ததற்கு பாஜக காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல எனவும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இது வரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளே விவசாயம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் வழக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தக்க நேரத்தில் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது" என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

முதலில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மாலையில் கோவையில் நடைபெறும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...