ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்தபடி ஏடிஎம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகின்ற பணத்தை பணியாளர்களது கணக்கில் வரவு வைத்து விவரம் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி மூலம் கொண்டுவரப்படும் பொருட்களை எடைபோட்டு வாங்க எடைதராசினை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நடைமுறைபடுத்த வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நியாயவிலைக் கடையில் தேங்கிக்கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்வதற்கு சீரான விற்பனை கொள்கை வேண்டும் எனவும், அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...