ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியர்களுக்கான 21 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 மாணவியர் விடுதிகளும், 3 கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும், ஐடிஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என 39 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்களை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியிலும் சேர தகுதி உடையவர். இவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து நிலையத்தில் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும், பாய், போர்வை, கட்டில் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

2017- 2018 ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் வரும் ஜூலை 12ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 27ம் தேதிக்குள்ளும் காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் விபரங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகளின் விளம்பர பலகையில் வெளியிடப்படும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...