ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியர்களுக்கான 21 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 மாணவியர் விடுதிகளும், 3 கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும், ஐடிஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என 39 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்களை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியிலும் சேர தகுதி உடையவர். இவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து நிலையத்தில் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும், பாய், போர்வை, கட்டில் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

2017- 2018 ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் வரும் ஜூலை 12ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 27ம் தேதிக்குள்ளும் காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் விபரங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகளின் விளம்பர பலகையில் வெளியிடப்படும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...