கோவையில் யானைகள் தொடர்பான பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் பேட்டி


கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதங்களையும் ஏற்படுத்தி வந்தது. மேலும், 3 வளர்ப்பு மாடுகளையும், 1 ஆடுவையும் இது தாக்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியாக கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த யானை மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், யானை இறந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. அதற்கான போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருகின்ற சட்டப்பேரபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்" என தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...