தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் கோவை மாணவி இரண்டாம் இடம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...