வால்பாறையில் கடும் பனிப்பொழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் பருவ மழை சரிவர பெய்யாததால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கின. வால்பாறையை நீராதாரமாகக் கொண்ட பல அணைகளும் வறண்டு காணப்பட்டன. 

குறிப்பாக, கடந்த ஆண்டு வால்பாறை பகுதியில் பருவமழை ஏமாற்றி விட்ட நிலையில், ஆறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீருக்குக் கூட பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை பகுதியில் உள்ள சோலையார் அணை, நல்லார் அணை, பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வால்பாறையில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இதனிடையே தற்போது குளிர்ந்த காற்றுடன் கடும் பனியும் பொழிந்துவருகிறது.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஆழியார் முதல் வால்பாறை சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். வால்பாறை மலையில் உள்ள தேயிலை தோட்டங்களையும் பனிமூட்டம் மூடியுள்ள நிலையில் அதன் பிரமிப்பு மிக்க காட்சியினை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எஸ்டேட் பகுதிகளில் இரவு, பகல் என கடும் குளிர் நிலவுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், தொழிலாளர்கள் அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...