ஸ்ரீ கிருஷ்ணா 2017 சாம்பியன் பட்டம் வென்ற கோவை தினமலர் கிரிக்கெட் அணி

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் மாவட்ட அளவிலான அனைத்து பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டி மே 24 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடைபெற்றது.



இதில், மாவட்ட அளவில் 9 அணிகள் 'ஏ' மற்றும் 'பி' என இரு குழுக்கலாக பிரித்து ஏ-குழுவில் டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், ஹலோ எப்எம், தி இந்து அணிகளும், பி- குழுவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கல், தினகரன், மீடியா லெவன், சூரியன் எப்எம் ஆகிய அணிகளும் லீக் முறை போட்டியில் பங்கேற்றன.



இதன் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தினமலர் அணி 19 ஓவர் முடிவுகளில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டைம்ஸ் அப் இந்தியா அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா 2017 சாம்பியன் பட்டம் வென்ற கோவை தினமலர் கிரிக்கெட் அணிக்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவர் பி.பாலமுருகன் மற்றும் மெக்கானிக்கல் துறைத் தலைவர் பி.அசோகவரதன் ஆகியோர் வெற்றிக் கோப்பையினை வழங்கினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...