ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழாம் தேதி ஊதியமானது வழங்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் பெரும்பாலான மாதங்களில், சரியான நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே துப்புரவுப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உடனடியாக விரைவில் ஊதியம் வழங்கவும், பணிப் பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...