கூலிக்கு ஜவுளி பொருள் உற்பத்தி செய்வோரின் சேவை வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு - சைமா பாராட்டு

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை கொடுத்து வரும் ஜவுளித் தொழிலில் பெரும்பாலான உற்பத்தி கூலிக்கு சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, சாயப்பட்டறை போன்ற துறைகளினால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கலால் வரி திட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலிக்கு சேவை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் குறைந்தபட்ச வரியான 5 சதவீத வரியை விதிப்பதன் மூலம் மேற்கண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள் மீதான வரியை கழித்து மீதி வரியை செலுத்த இயலும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரிக்குழு 16-வது கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலியின் மீதான சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறித்து அறிவித்துள்ளது.

சைமா தலைவர் எம்.செந்தில்குமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமது வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தி கூலி சேவை வரியை 5 சதவிகிதமான குறைத்தமைக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பாக தனது நன்றிகளை நிதியமைச்சருக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும், தென் மாநில முதலமைச்சருகும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் சைமா அனைத்து ஜவுளி உற்பத்தி கூலிக்கும் 5 சதவிகித வரியை விதிக்க கோரியிருந்தது. ஆயத்த ஆடை மற்றும் விரிப்பு துணிகள் இவற்றில் விடுபட்டு இருப்பது ஜவுளி உற்பத்தியிலேயே அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் இத்துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்குழு கூட்டத்தில் ஆயத்த ஆடை, விரிப்பு மற்றும் இதர மதிப்பு கூட்டுப் பொருட்களை கூலிக்கு தயார் செய்யும் அனைத்து துறைகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைமா தலைவர் மேலும் கூறுகையில், செயற்கை பஞ்சு மற்றும் நூல் மீதான வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர்ந்து வரும் 18 ஆம் தேதி உரிய அறிவிப்பை விடுக்க நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியஸ்டர் மற்றும் இதர பஞ்சு மற்றும் நூலின் மூலம் தயாரிக்கப்படும் துணை பெரும்பாலும் பாமர மக்களால் பயன்படுத்தப்படுவதாலும், பல்வேறு அரசுகளின் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாலும், அரசு இத்துணிகளின் விலையை வரிவிதிப்பினால் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஏற்கனவே விடுத்துள்ள இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்து செயற்கை இழை மற்றும் நூலின் மீதான வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கும் என்று சைமா தலைவர் எம்.செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...