மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை தடைசட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக அரசு ஒரு கண்டன அறிக்கை கூட விடமால் மெளனம் காப்பதாகவும், மத்திய அரசிடம் அடிமையாக தமிழக அரசு மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாடுகளை விற்பனை செய்ய விதித்த தடையை நீக்கவில்லை எனில், அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...