சேலம் ரயில்நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறைகள் திறப்பு

ரயில்நிலையங்களை பயணிகளுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் உதவும் வகையில் மேம்படுத்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, இன்று (14.06.2017) காலை சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின், கோட்டப் பொறியாளர் திரு எம்.மாரியப்பன், உதவி வணிகமேலாளர் திரு எம்.ஷாஜஹான், சேலம் ரவுண்ட் டேபிள் 28 அமைப்பை சேர்ந்த திரு.சுப்பு, திரு.கமலேஷ், திரு, கார்த்திக்  மற்றும் இதர ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைத்தார். 



சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாக இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 



நிகழ்ச்சியில் பேசுகையில் திரு.சந்திரபால் அவர்கள் தெற்கு ரயில்வேயுடன் கை கோர்த்து மாண்புமிகு இந்தியப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்நிலையங்களில் இத்தகு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்வந்ததற்கு ரவுண்ட் டேபிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். 



ரவுண்ட் டேபிள் அமைப்பின் திரு.சுப்பு பேசுகையில் சேலம் ரயில் நிலையத்தில் கழிவறைகள் 6.5 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய ரயில்வேயுடன் இணைந்து இது போன்ற மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். திரு விஜுவின் பேசுகையில் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...