கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளியின் கலைப்படைப்பு

கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளி சோப்பு, மெழுகு, பென்சிலில் வடித்த சிற்பங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

கோவை தங்க நகை தொழிலாளியான உன்னால் முடியும் ராஜா மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கருணாநிதி அவர்களின் வைரவிழா நிகழ்வு அண்மையில் சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும் அவரது தலைமேல் பேனாமுனை வைத்து அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பமாக உருவாக்கி இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கருணையுள்ளத்தையும், மக்களுக்கு ஆற்றிய சேவையயை நினைவு கூறும் வகையில் குளிக்க பயன்படுத்தும் சோப்பில் எம்.ஜி.ஆரின் உருவத்தை வண்ணம் கொடுத்து வரைந்திருந்தார். வெளிச்சத்தில் காண்பித்தால் எம்.ஜி.ஆரின் கண்ணாடி பிரதிபலிப்பது நன்றாக தெரியும் வண்ணம் வரைந்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர் உருவத்தை மெழுகுச்சிலையில் உருவாக்கி எம்.ஜி.ஆர் 100 என்று எழுத்தில் ஐந்நூறு கிராம் எடையில் உருவாக்கியிருந்தார். பென்சிலில் 400 மில்லி தங்க வர்ணம் பூசப்பட்ட எம்.ஜி.ஆர் உருவத்தை பேன்சில் முனையில் சிறிய அளவில் உருவாக்கி இருந்தார்.

தங்க நகைத்தொழிலாளியாக இருந்தாலும், தனது கலைபடைப்பின் மூலம் பல்வேறு சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்து பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார் யு.எம்.டி ராஜா.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...