வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ கொண்டாடப்பட்டது

கோவை வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார். 

‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...