மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் பேட்டி

கோவை அரசு மருத்துவமனையில் விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே  கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...