மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதியதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.

மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...