மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதியதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.

மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...