கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து கோவை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை டவுண்ஹால் பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் மறையிட்டனர். 

ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக டவுண்ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...