வங்கி கடன் பெற தவறான ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- நிறுவனங்கள் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரிக்கை

பதிவு செய்யப்பட்ட செயல்படாத நிறுவனங்கள் வங்கி கடன் பெற தவறான ஆவணங்களை தயாரித்து தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி கூறியதாவது:-

கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதிவு செய்தும் இருப்புநிலை ஆவணங்களை பதிவு செய்யாமல், செயல்படாமல் உள்ள ஷெல் நிறுவனங்கள் எனப்படும் 5 ஆயிரத்து 766 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்படும் இயக்குனர்கள் செயல்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இதனால் உருவாகும். செயல்படாமல் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இத்தகைய ஷெல் நிறுவனங்கள் வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய வாராக்கடன் மிகப்பெரிய பொருளாதார மோசடியாக கருதப்படும் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது. 

இந்த ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, கலால் மற்றும் வணிக வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அத்துறைகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தொகை 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு முழுமையாக இணையம் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மிக சுலபமாக நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்" என ஜோஸ்குட்டி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இத்தகைய செயல்படாமல் இருந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவங்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் போது அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...