இந்திய இராணுவ அகடமியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள 390 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மேல்நிலைக் கல்வி தேர்ச்சி (10, 12 திட்டம்) ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

மேலும், கூடுதல் விபரங்களை www.upsc.gov.in மற்றும் www.joinindianarmy.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேர விழையும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் விபரங்களை கோவை முள்ளாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...